தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! 24 தீயணைப்பு வாகனங்கள் விரைவு!
இன்று அதிகாலை சென்னை காட்டுப்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை பூவிருந்தவல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலை நடுவே பில்லர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளுக்காக சாலையின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோன் அருகிலேயே தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான குடோனில் மரக்கட்டைகள் இறக்கி வைத்து ஷீட்கள் அடிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
தற்போது, இந்த பகுதியில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் வழக்கம் போல் ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதில், குடோனில் இருந்த பெயிண்ட், மரக்கட்டைகள், ரசாயணங்கள் தீயில் எரிந்தது.
இந்த சம்பவம் தொடா்பாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினா் 24 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தீயணைப்பு அதிகாாிகள் தகவல் தொிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!