டிரைவர் தூங்கியதால் கவிழ்ந்த பேருந்து!! 2 குழந்தை உட்பட 5 பேர் பலி!!

 
விபத்து

ஆந்திரா சிந்தூர் அருகே மலைப்பாதையில் இன்று சென்ற தனியார்  பேருந்து சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்து

ஒடிசா மாநிலம் பவானி புறத்திலிருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு 60 பயணிகளுடன் தனியார் பேருந்து நேற்று மாலை புறப்பட்டது. இந்த பேருந்தில் ஒடிசாவை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் விஜயவாடாவில் வேலை செய்வதற்காக வந்து கொண்டு இருந்தனர். பேரூந்து  இன்று காலை சிந்தூர் மண்டலம், எடுகுரல்லபள்ளி தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதையில் வந்துகொண்டிருந்தபோது  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில்  பேருந்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் சிகைச்சைக்காக பத்ராச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  பின்னர் விபத்து குறித்து  தகவலறிந்து வந்த பத்ராச்சலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களில் மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பிழைப்பு தேடி வந்த கூலி தொழிலாளர்கள் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web