பச்சிளம் குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறிய கொடூரம்!! மதுரையில் பரபரப்பு!!

 
குழந்தை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் ரத்தக் கறையுடன் கூடிய துணி மூட்டையை அப்பகுதி தெரு நாய்கள் ஒன்றுகூடி கடித்து குதறி தின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் ரத்தக்கறை படிந்த மூட்டையை சுற்றி இருந்த நாய்களை விரட்டிவிட்டனர். நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருந்த அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது நெஞ்சை பதற வைக்கும் காட்சியை கண்டனர். அதில், பிறந்து சில மணி நேரமேயான ஆண் சிசு ஒன்று ரத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில் கிடந்தது.

madurai junction
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்து பலியான பச்சிளம் சிசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் குழந்தையை தெருவில் வீசிவிட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த தெருவில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளியை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குழந்தை

சொத்து தகராறு காரணமா அல்லது கள்ளக்காதலில் பிறந்த குழந்தையா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.பிறந்து சில மணி நேரமேயான பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தையை தெரு நாய்கள் கடிக்கும்படி வீசிச்சென்ற பாதகத்தை யார் செய்தார்களோ என்று அங்கு கூடியிருந்த மக்கள் கண்ணீர் விட்டு கண் கலங்கிய சம்பவம் நெஞ்சை கனக்க வைத்தது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web