ஒரு காதலனை ஏவி மறுகாதலனை கொலை செய்த கொடூரம்!! பேஸ்புக் காதலியால் விபரீதம்!!

 
மாரிமுத்து

மதுரை மாவட்டம்  சிஎம்ஆர் சாலையில் வசித்து வருபவர்  துரைப்பாண்டி. இவருடைய  மகன் 25 வயது மாரிமுத்து. இவர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து  வந்தார். இவர்  மே 28ம் தேதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து இவருடைய தந்தை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதன் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வந்தனர். கடைசியாக அவருடன் பேசியவர்களின் மொபை எண் மூலம் தேடுதல் வேட்டை தொடங்கியது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

மாரிமுத்து


இதன்படி மாரிமுத்துவிற்கு சில ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. அதே நேரத்தில் அந்த பெண்ணுடன் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வில்வதுரையும் பேஸ்புக் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு 12வது பட்டாலியனில் 2ம் நிலை காவலராக வில்வதுரை பணிபுரிந்து  வருகிறார். ஒரே பெண்ணை இருவரும் காதலித்து வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

மாரிமுத்து
இதனையடுத்து  மே 28ம் தேதி கும்மிடிப்பூண்டியில் பணிநேரம் முடிந்ததும் மாரிமுத்துவை வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள் இசக்கிராஜா, ரவிக்குமார் மூவரும்  காதலியுடன் பழக்கத்தை கைவிடுமாறு மிரட்டல் விடுத்தனர். இதற்கு ஒப்பு கொள்ளாததால் மாரிமுத்துவை காரில் கடத்தி வந்து தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் ஆளில்லாத நீரோடையில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். இதன் பின்னர்  உடலை சாக்கு மூட்டையில் கட்டி, காரில் ஏற்றிக் கொண்டு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த தளவாய்புரம் புனல்வேலி கண்மாயில் கல்லைக்கட்டி வீசி விட்டனர். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வில்வதுரை, இசக்கிராஜா, ரவிக்குமார் மூவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. புனல்வேலி கண்மாயில் வீசப்பட்ட மாரிமுத்து உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web