பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

 
கள்ளிப்பட்டி ஜோதி

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி என்கிற ஜோதி ராஜா காலமானார்.  தமிழ் சினிமாவில் அப்போதிருந்து இப்போது வரை பிரபல இயக்குநர்களாக இருப்பவர்களுக்கும், பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ந்து சினிமா தயாரித்துக் கொண்டிருந்த தயாரிப்பாளர்களுக்கும், அப்போதைய முன்னணி ஹீரோக்களுக்கும் நன்கு தெரிந்த பெயர் தான் கள்ளிப்பட்டி ஜோதி. 

சோலையம்மா

இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் ஆபீஸ் பாயாக கோடம்பாக்கத்தில் அறிமுகமாகி, படிப்படியாக உழைப்பால் வளர்ந்து, கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் குட்டிக் கோடம்பாக்கம் என அழைக்கப்படும் கோபிச்செட்டிபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 40-50 கிராமங்களின் லொக்கேஷன் மேனேஜராகப் பணியாற்றியவர் தான் கள்ளிப்பட்டி ஜோதி( எ) ஜோதி ராஜா.

தாய் மனசு

இவர் இயக்குநர் கஸ்தூரி ராஜாவை வைத்து ‘சோலையம்மா’, ‘தாய்மனசு’ என்ற படங்களை கற்பக ஜோதி பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் தயாரித்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 

 

From around the web