ஆட்டை வெட்டி கூறு போட்டு தலையுடன் புகார் அளிக்க வந்த விவசாயி!!

 
ஆடு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கொட்டாரமடுகு கிராமத்தில் வசித்து வருபவர் 41 வயதான முருகன் இவர்    உழவர் சந்தையில் வாழை இலை வியாபாரம் செய்து வரும் இவர், கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கிடா ஆட்டை வளர்த்து வந்துள்ளார். 

வேலூர்

இந்த நிலையில், கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆட்டை நேற்று அதிகாலை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். விடிந்து எழுந்து பார்த்தபோது ஆடு காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகன், பல இடங்களில் தேடிப் பார்த்தார். அப்போது அவரின் கிராமத்துக்குள்ளேயே ஓரிடத்தில் முருகன் வளர்த்து வந்த ஆட்டுத் தலையும், கொஞ்சம் இறைச்சியும் வெட்டி வைக்கப்பட்டிருந்தை கண்டுபிடித்தார்.

இதுகுறித்து விசாரித்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் ஆட்டை திருடிச் சென்று வெட்டி சமைத்து சாப்பிட்டதும், மீதமிருந்த கறியை கூறுப்போட்டு விற்கப் பார்த்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. 

ஆடு

அவர்களிடமிருந்து ஆட்டின் தலையைக் கைப்பற்றிய முருகன், நேராக குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்துக்குச் சென்று, “சாமிக்கு வேண்டியிருந்த ஆட்டை திருடி தின்னுட்டானுங்க சார்” என்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, எஸ்.ஐ சிலம்பரசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web