சொந்த மகனை நரபலி கொடுத்த தந்தை!! தாய் பரபரப்பு வாக்குமூலம்!!

 
நரபலி

 


பீகார் மாநிலம் பாங்கா மாவட்டம் ஆம்பூர் பகுதியில் வாலிபர் ஒருவர் தனது 7 வயது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் விஜயதசமி நாளன்று நடந்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘மஹோடா கிராமத்தில் தீபக் சர்மா என்பவர் தனது மனைவி குஷ்பூ தேவியுடன் வசித்து வருகிறார்

நரபலி

 இந்த தம்பதிக்கு 7வயதேயான ராகவ் குமார் என்ற மகன் இருந்தார். இதில் தீபக் சர்மா மந்திர தந்திரம் உள்ளிட்ட மூட நம்பிக்கைகளின் மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர் என்று கூறப்படுகிறது. மகன் மரணத்தில் மர்மம் இருப்பதை அறிந்த தாய் குஷ்பூ தேவி போலீசாரிடம் தனது சந்தேகத்தை தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தீபக் தனது 7 வயது மகனை நரபலி கொடுத்தது தெரிய வந்தது.

போலீஸ்

மேலும் தீபக்கின் அறையை போலீசார் ஆராய்ந்ததில், சென்சார் செய்யப்பட்ட கேமரா, பென் டிரைவ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.சொந்த மகன் என்று கூட பாராமல் தந்தையே விஜயதசமியன்று நரபலி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web