போதையில் தள்ளாடியபடியே பள்ளிக்கு சென்ற தந்தை! தலைமை ஆசிரியைக்கு நேர்ந்த அவமரியாதை!

 
பள்ளி தலைமையாசிரியர்

பள்ளியில் படிக்கும் மகளை பார்க்க மதுபோதையில் வந்த தந்தையை, தலைமை ஆசிரியை தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தலைமை ஆசிரியையிடம் தரக்குறைவாக பேசியதால் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பு ஏறப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்  மாவட்டம் கள்ள பெரம்பூரில் அரசு உயர்நிலைபள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை அங்கு படிக்கும் மாணவி ஒருவரின் தந்தை செல்வகுமார் என்பவர் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது பள்ளியில் காலை வழிபாடு நடந்து கொண்டிருந்தது.

க்ரைம்

அப்போது வழிபாடு நடந்து கொண்டிருப்பதால் பிறகு வாருங்கள் என்று பள்ளி தலைமை ஆசிரியை, செல்வகுமாரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தலைமை ஆசிரியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வாக்குவாதம் வலுத்து தலைமை ஆசிரியையை செல்வகுமார் ஆபாசமான வார்த்தைகளால் தரக்குறைவாக திட்டியுள்ளார். இதனை தட்டிக் கேட்ட சண்முகம் என்ற உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மற்றொரு ஆசிரியரையும் செல்வகுமார் கன்னத்தில் அறைந்திருக்கிறார். தலைமை ஆசிரியையின் இருக்கையில் அமர்ந்து பள்ளியையே அதகளம் செய்துள்ளார்.

இது குறித்து கள்ள பெரம்பூர் போலீசில் தலைமை ஆசிரியர் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தந்தை செல்வகுமாரை அதிரடியாக கைது செய்தனர்.

தஞ்சாவூர் தஞ்சை

போலீசாரின் முதல் கட்டவிசாரணையில், செல்வகுமார், மதுபோதையில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் பள்ளிக்கு வந்து தன் மகளை பார்க்க வந்ததாகவும் தெரிகிறது. மதுபோதையில் இருக்கும் போது பள்ளிக்கு வரக்கூடாது என்று தலைமை ஆசிரியை மறுத்ததால் செல்வகுமார் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார் என்று போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் படிக்கும் பள்ளியில் புகுந்த மாணவியின் பெற்றோர் ஒருவர், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய பெற்றோரே இப்படி நடந்து கொள்ளலாமா என்று பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web