விருந்துக்கு அழைத்து மருமகனை போட்டுத் தள்ளிய மாமனார்!! திருமணமான 4 நாட்களில் சோகம்!!

 
முத்தரசன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி  வீரபுரம் பகுதியில் வசித்து வருபவர் சிற்றரசு மகன் முத்தரசன். இவருக்கு வயது 23, அதே திருத்துறைப்பூண்டி நகர் மங்கல நாயகி புரத்தில் வசித்து வரும் அரவிந்தியாவுடன் கடந்த 5 நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியிரை  ஜூன் 15ம் தேதி மாமனார் விருந்து சாப்பிட அழைத்தார்.

முத்தரசன்

இந்த விருந்திற்காக முத்தரசன் தனது மனைவியுடன் சென்றுள்ளார். விருந்து முடிந்ததும் முத்தரசன் அங்கேயே தங்கினார்.  யாரும் எதிர்பாரத விதமாக அடுத்த நாள் புதுமாப்பிள்ளை முத்தரசன் மாமனார் வீட்டிற்கு அருகில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.  அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர்  முத்தரசன் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

முத்தரசன்

இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில்  முத்தரசன் அவரது மாமனார் ரவிச்சந்திரனை பலர் முன்னிலையில் எதிர்த்துப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் மருமகன் முத்தரசனை வெட்டி கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து மாமனார் ரவிச்சந்திரனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web