தூண்டில் போட்ட போது தொண்டைக்குள் துள்ளிக் குதித்த மீன்!! மீன் வேட்டை பரிதாபங்கள்!!

 
மீன்

தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்க ஒருவர் சென்றுள்ளார். இவர் நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்தார். அப்போது, அவர் போட்டு வைத்த தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் அந்த நபரின் தொண்டைக்குள் விழுந்துள்ளது. 

வந்த வேக்கத்திலேயே அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்த நிலையில், குறுகலான பகுதியில் சிக்கிய மீனால் வெளியேற முடியவில்லை. மேலும் தொண்டைக்கும், சுவாச குழிக்கும் இடையில் அந்த மீன் சிக்கி கொண்டது.

மீன்

இதனால் பிராணவாயு செல்லும் வழி அடைக்கப்பட்டதால் அந்த நபருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. அதில் மீன் சிக்கி இருந்த சரியான இடம் கண்டறியப்பட்டு, அவசரகால அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. 

இதுகுறித்து மருத்துவமனையின் அதிகாரி செர்ம்ஸ்ரீ பாத்தோம்பனிகிராட் கூறுகையில், “நீரில் இருந்து துள்ளி குதித்து ஒருவரின் தொண்டையில் மீன் சிக்கிய சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. இதற்கு முன் இதுபோன்ற சம்பவங்களை நான் கேள்விபட்டதே இல்லை. எங்களது நோயாளியின் உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாத வகையில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு காப்பாற்றிவிட்டனர்” என கூறியுள்ளார். 
முன்னதாக கடந்த மார்ச் மாதம், ஆவோ டான் கூ பீச்சில், நீச்சலில் ஈடுபட்டிருந்த சுற்றுலா பயணி நொப்படோல் ஸ்ரீங்கம் என்பவரின் தொண்டையில் ஊசி மீன் ஒன்று குத்தியதில் அவரது நிலைமை மோசமாக உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web