மனைவியின் கைகளை வெட்டிய கணவன்!! பகீர் பிண்ணனி!!

 
தேனி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சந்தை தெருவில் வசித்து வருபவர் பவித்ரா (27). கடந்த 2011ம் ஆண்டு அதே பகுதியான சுருளிப்பட்டியில் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் பழனி முருகன் (39) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. பவித்ரா சொந்தமான துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

ராயப்பேட்டை

கணவன், மனைவி இருவரும் 10 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து உத்தமபாளையம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கணவன், மனைவி இருவரும் தனித்தனி வீட்டில் வசித்து வரும் நிலையில், பவித்ராவின் கண்காணிப்பில் 2 குழந்தைகளும் வளர்ந்து வருகின்றனர். இதனால் குழந்தையை பார்க்க விரும்பிய பழனி முருகன், பவித்ராவின் வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தைகளை பழனி முருகனிடம் காட்டக்கூடாது என்று உறுதியாக இருந்த பவித்ராவால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

தேனி

இந்நிலையில் பவித்ராவின் துணிக்கடைக்கு சென்ற பழனிமுருகன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றிப்போகவே பழனிமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியின் இரு கைகளையும் வெட்டியதுடன், உடலின் பல்வேறு பகுதிகளிலும் சரமாரியாக வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.  இதில் பலத்த காயமடைந்த ரத்த வெள்ளத்தில் பவித்ரா மயயங்கி கீழே விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பவித்ராவை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு போலீசுக்கும் தகவல் அளித்தனர்.


இதற்கடையில் மனைவி பவித்ராவை தாக்கியதாக கூறி ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் பழனிமுருகன் சரணடைந்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றரர். கணவன், மனைவி பிரச்சினையில் 2 குழந்தைகளின் கதியை நினைத்து அக்கம் பக்கத்தினர் கவலை அடைந்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web