சிறை சமையலறை வழியாக தப்பிச்சென்ற கொலை குற்றவாளி!!

 
பினுமென்

கேரள மாநிலத்தில் கொலை குற்றவாளி ஒருவர் சிறையில் இருந்து சமையல் அறை வழியாக தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த ஜனவரி மாதத்தில் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் வசித்து வந்த ஷான்பாபு என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை கடத்திய கும்பல் அவரை 38 இடங்களில் வெட்டி படுபயங்கரமாக கொலை செய்துவிட்டு, அவரது உடலை போலீஸ் நிலையம் முன்பு வீசிவிட்டு சென்றது. இதனால் கேரளாவில் அச்சம் நிலவியது.இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையின் விளைவாக ஷான்பாபுவை கடத்திக் கொலை செய்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கோட்டயத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

சிறை

இந்நிலையில் சிறையில் இருந்த கொலைக் குற்றவாளிகள் 4 பேரில் ஒருவனான பினுமோன் சிறையில் இருந்து இன்று அதிகாலை போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பிச் சென்றுள்ளான். சிறையில் அமைக்கப்பட்டுள்ள சமையல் அறை வழியாக குற்றவாளி பினுமோன் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.சிறையில் இருந்து தப்பியோடிய கொலை குற்றவாளியை மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் சிறையில் இருந்து கொலை குற்றவாளி தப்பிச் சென்ற சம்பவம் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்ததுடன், விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விரைவில் பினுமோன் பிடிபடுவான் என்று நம்பிக்¬ தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் உடலை போலீஸ் நிலையம் முன் போட்டுவிட்டு குற்றவாளிகள் தப்பிச்சென்றனர். திருவனந்தபுரம், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த ஷான் பாபு கடந்த ஜனவரி மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஷான் பாபுவை கடத்திய கும்பல் அவரை கொடுமை படுத்தி கொலை செய்தனர். அவரது உடல் முழுவதும் 38 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. ஷான் பாபுவை கொலை செய்த கும்பல் அவரது உடலை போலீஸ் நிலையம் முன் போட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாபுவை கடத்தி கொலை செய்த ஆட்டோ டிரைவர் பினுமொன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

சிறை

கொலை குற்றவாளிகள் அனைவரும் கோட்டயத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவனான பினுமொன் இன்று அதிகாலை சிறையில் இருந்து தப்பிச்சென்றுள்ளான். சிறையில் உள்ள சமையல் அறை வழியாக இன்று அதிகாலை 5.30 மணியளவில் குற்றவாளி பினுமொன் தப்பியோடியுள்ளார். இதையடுத்து, சிறையில் இருந்து தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மோப்பநாய் உதவியுடன் போலிசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மிகவும் பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து சமையல் அறை வழியாக கொலை குற்றவாளி தப்பிச்சென்றது எவ்வாறு? என்பது குறித்தும் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web