அடுத்த அதிர்ச்சி! எடப்பாடி மனைவி ராதாவுக்கு கொரோனா!

 
எடப்பாடி மனைவி ராதா

எதிர்கட்சி தலைவர் எடப்பாடிக்கு இது சோதனை காலம் போல. ஒரு பக்கம் பன்னீர்செல்வம் தன்னால் முடிந்தளவுக்கு மல்லுகட்ட, தற்போது அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் அதிமுக கட்சி பொதுக்குழு, அரசியல் நிலவரம் என அடுத்தடுத்து கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து எடப்பாடியுடன் சந்தித்து, விவாதித்த நிலையில், அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒவ்வொருவரும் மருத்துவமனை நோக்கி, கொரோனா டெஸ்ட் எடுக்க தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் அண்மைகாலமாக கொரோனா பாதிப்பு அதிகாரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எடப்பாடி மனைவி

இதன் காரணமாக தமிழகம் முழவதும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிமுக பொதுக்குழு மற்றும் ஈபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனைகளில் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மக்கள் சுதந்திரமாக இயங்க வழிவகை செய்வது, காவல் துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் கடமை.- எடப்பாடி பழனிச்சாமி

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web