திருவிழாவில் ஓட ஓட விரட்டி ரவுடி கொலை!! தஞ்சையில் பயங்கரம்!!!

 
கொலை

தஞ்சாவூர் மாவட்டம் இனாத்துகான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சுபாஷ் சந்திர போஸ் (27). இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள சியாமளா தேவி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த சுபாஷ் சந்திர போஸ்க்கும் அவரது உறவினர்களான ஜோதி ராஜனுக்கும், சிவக்குமாருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டியுள்ளது.

தஞ்சாவூர் சியாமளா தேவி கோவில்

இதனைக் கண்ட ஊர் பெரியவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் நேற்று இரவு கோவில் சார்பில் மஞ்சள் நீர் விளையாட்டு விழா நடைபெற்று இருக்கிறது. அப்போது ஒன்று கூடிய ஊர் மக்கள் அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது சுபாஷ் சந்திர போஸ் கையில் அரிவாளுடன் அங்கு வந்திருக்கிறார்.

அப்போது, அவரது தூரத்து உறவினரான ஜோதிராஜன் மற்றும் சிவக்குமார் மீது அவர் மஞ்சள் நீரை வேண்டுமென்றே ஊற்றி தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ஜோதிராஜனும், சிவகுமாரும் சேர்ந்து சுபாஷ் சந்திர போஸை அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் படுகாயமடைந்த சுபாஷ் சந்திர போஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் சியாமளா தேவி கோவில்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமிழ் பல்கலைக்கழக போலீசார் சுபாஷ் சந்திரபோஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவில் மஞ்சள் நீர் விளையாட்டின் போது ரவுடி ஒருவர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்குதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web