வயலில் கவிழ்ந்த பள்ளிப்பேருந்து!! அலறித் துடித்த பெற்றோர்கள்!!!

 
பள்ளிப்பேருந்து

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் ஊராட்சி பகுதியில் சத்திய சாய் என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்களை அழைத்துச் செல்ல பேருந்து வசதி உள்ளது. 

அதன்படி ஆதனூர், கிரிவலம், பெருமுளை, சிறுமுளை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களை அழைத்துக்கொண்டு பேருந்து இன்று காலை பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. இதில், 10, 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்தனர். 

பள்ளிப்பேருந்து


கனகம்பாடி அருகே பள்ளிப்பேருந்து வந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வயல் பகுதியில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் படுகாயமடைந்தார். பேருந்து கவிழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து பேருந்தில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

கடலூர்

இந்த விபத்தில் மாணவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில்  படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிப்பேருந்து கவிழ்ந்த செய்தியை கேள்விப்பட்ட பெற்றோர்கள் பதறி அடித்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். மாணவர்களுக்கு பெரிய காயங்கள் இல்லாத நிலையில் அவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினர். கட்டுப்பாட்டை இழந்து வயல் பகுதியில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web