சொத்துக்காக தம்பியை அடித்தே கொலை செய்த அக்கா!! திருவள்ளூரில் பரபரப்பு!!

 
கொலை

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த மாபூஸ்கான்பேட்டையைச் சேர்ந்தவர் தனலட்சுமி. திருமணமான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தம்பி பூபாலன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

பூபாலனுக்கு 41வயதாகியும் திருமணமாகவில்லை என்று கூறப்படுகிறது. சுவர்களில் விளம்பரம் எழுதுவது, படம் வரைவது என்று ஓவியம் வரையும் தொழிலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பூபாலன் மனநலம் குன்றி காணப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தனியாக இருந்து வந்துள்ளார்.

திருவள்ளூர்
இந்நிலையில் இவரது மூத்த சகோதரியான தனலட்சுமிக்கும், பூபாலனுக்கும் இடையே சொத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருவருக்கும் சொந்தமான 4 சென்ட் அளவு நிலத்தை யார் வைத்துக் கொள்வது என்பதில் இருவரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். இதனால் தனலட்சுமியின் கணவர் ரவியை, பூபாலன் அரிவாளால் வெட்டியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பூபாலன் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

death

போலீஸ் நடத்திய விசாரணையில் பூபாலனின் சகோதரி மற்றும் அவரது கணவர் ரவியும் சேர்ந்து பூபாலனை உருட்டுக்கட்டையால் கண்மூடித்தனமாக சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காமல் வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டியுள்ளனர். இதனால் படுகாயத்துடனும், ரத்தப்போகுடனும், தண்ணீர் உணவு இன்றி பூபாலன் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து பூபாலனை அடித்துக் கொன்ற சகோதரி தனலட்சுமி மற்றும் அவரது கணவர் ரவியை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.4 சென்ட் நிலத்துக்காக சொந்த தம்பியையே காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web