மனைவி என நினைத்து மாமியாரை கொலை செய்த மருமகன்!! பகீர் பிண்ணனி!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு சஞ்சய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பவ்யாஸ்ரீ (30). இவருக்கும், டிரைவரான நாகராஜு (35) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததுள்ளது. மதுபழக்கத்துக்கு அடிமையான நாகராஜு தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், கோபமடைந்த மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன், தன் தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்த பவ்யாஸ்ரீ, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கணவர் நாகராஜு, கடந்த 13-ம் தேதி மாமியார் வீட்டுக்கு சென்று, மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதையடுத்து மாமியார் சௌபாக்கியா (55), மருமகனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நாகராஜு அன்றிரவு 7.30 மணி அளவில் மனைவியை பார்க்க, மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு அவரது மனைவி வீட்டில் இல்லை, இதனால் மாமியார் கீரை விற்கும் கடைக்கு சென்ற நாகராஜு, மாமியார் தலையில் சுத்தியலால் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவரது மாமியார் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார், இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சௌபாக்கியா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, மருமகன் நாகராஜுவை எச்.ஏ.எல்., போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரிடம் அவர் கூறுகையில், “எனக்கு மாமியாரை கொல்லும் எண்ணம் இல்லை; மனைவியை கொல்லவே திட்டம் போட்டேன். ஆனால், போதையில் யார் என்பது தெரியவில்லை. மனைவி என நினைத்து மாமியாரை சுத்தியலால் அடித்து விட்டேன்” என தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!