மாணவனைக் காதலித்து ஏமாற்றிய டீச்சர்! தற்கொலையில் திடீர் திருப்பம்!

 
சர்மிளா

பள்ளி மாணவர்களிடையே குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவர்களின் மன அழுத்தத்தை போக்கவும் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரவும் பள்ளிகளும், பெற்றோர்களும் அரும்பாடுபட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் சில முறைகேடற்ற ஆசிரியர்கள், கட்டுப்பாடில்லாத மாணவர்களால் மாணவ ஆசிரிய சமுதாயமே சீரழிந்து வருகிறது.

தற்கொலை

சென்னை அம்பத்தூர் அருகே வைகை தெருவில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவரது 17 வயதான மகன் கிருஷ்ணகுமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ப்ளஸ்2 முடித்துள்ள கிருஷ்ணகுமார், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தனது நண்பர்களுடன் சென்னை, மாநிலக் கல்லூரிக்கு கலந்தாய்வுக்கு சென்று விட்டு அன்றைய தினம் மாலையில் வீடு திரும்பினார்.

அதன் பின்னர் கிருஷ்ணகுமார் வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கிருஷ்ணகுமார் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, உறவினர்கள் உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.  இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாரணையில் கிருஷ்ணகுமார் அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற போது அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த சர்மிளா என்ற ஆசிரியை நடத்தி வந்த டியூஷன் செண்டரில் கடந்த 3 ஆண்டுகளாக படித்து வந்துள்ளார்.

டியூசன் படிக்கும் பொழுது மாணவன் கிருஷ்ணகுமாருக்கும் ஆசிரியர் சர்மிளாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இதனிடையே ஆசிரியை சர்மிளாவிற்கு அவரது வீட்டில் திருமண வரன் பார்த்து வந்ததால் மாணவனுடனான நட்பை துண்டித்துள்ளார்.

சர்மிளா

மேலும் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதால் ஆசிரியை மாணவனுடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்து விட்டார். இதனால் மாணவன் பலமுறை ஆசிரியை சர்மிளாவை தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். எனினும் ஆசிரியை மாணவனுடனான காதலைத் தொடர மறுத்ததால் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த ஆசிரியை, திருமணம் நிச்சயமானதும், தன்னைத்  தவிக்க விட்டு சென்று விட்டாளே என நினைத்து மாணவன் விரக்தியில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

மாணவனின் தற்கொலைக்கான காரணத்தை அறிய, போலீசார், மாணவனின் செல்போனை ஆய்வு செய்ததில் இவை அனைத்தும் வெளி வந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியை சர்மிளா தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். டியூஷன் சொல்லி கொடுத்த ஆசிரியையுடான கூடா நட்பால் மாணவன் வழி தடுமாறி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மாணவர்களின் உறவினர்களிடையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web