மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டணை!! பரபரப்பு தீர்ப்பு!!

 
பாலியல் வன்கொடுமை

சென்னை தி.நகர் பகுதியில் ஆசிரியை ஒருவர் டியூசன் நடத்தி வந்தார். இவருக்கு வயது 29. இவர் தன்னிடம் டியூசன் படித்து வந்த 7ம் வகுப்பு மாணவியை தனது காதலருடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிக்கு காரில் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவி ஆசிரியையின் காதலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 
இதனால் பயந்து போன மாணவியை மிரட்டிய ஆசிரியை மற்றும் அவரது காதலர் பணம், நகைகளை பறிக்கும் செயலில் ஈடுபட்டனர்.

பாலியல் வன்கொடுமை

நாளடைவில் மாணவியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியை மற்றும் காதலரை அதிரடியாக கைது செய்தனர்.

court order
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம். ராஜலெட்சுமி முன் விசாரணைக்கு வந்தது.வழக்கு விசாரணை முடிவில், ‘‘மாணவி மீதான வன்கொடுமை குற்றம் உறுதி செய்யப்பதைத் தொடர்ந்து டியூசன் ஆசிரியைக்கும், அவரின் காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும் டியூசன் ஆசிரியைக்கு ரூ.70 ஆயிரமும், காதலருக்கு ரூ.60 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்ப அளித்தார். மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ. 10 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web