4 ம் வகுப்பு மாணவியை கை, கால்களில் சராமாரியாக அடித்து நொறுக்கிய ஆசிரியை!!

 
அடி

சென்னை கொரட்டூர் ரயில் நிலையம் அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 4-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் இன்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றபோது வகுப்பு ஆசிரியை மாணவர்களின் வீட்டுப்பாடத்தை சோதனை செய்துவந்தார்.அப்போது, அந்த மாணவி தமிழ்ப் பாடத்தில் வீட்டுப்பாடம் எழுதாத காரணத்தால், வகுப்பு அறையில் வைத்திருந்த பிரம்பால், சிறுமியின் வலது கால் மற்றும் இடது கையில் கண்மூடிதனமாக அடித்துள்ளார். இதனால் சிறுமிக்கு கை, காலில் ரத்தம் கட்டி வீக்கமடைந்தது.

அடி

இந்நிலையில் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை கூட பள்ளியில் அளிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து மாலை பள்ளியில் இருந்து சிறுமியை வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்த தந்தையிடம், வகுப்பு ஆசிரியை தன்னை பயங்கரமாக அடித்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.இதனால் கோபமடைந்த தந்தை உடனடியாக இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

தொடர்ந்து ஆசிரியை பார்வதி மீது தந்தை சத்யா கொரட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொரட்டூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடமும் குழந்தையைத் தாக்கிய ஆசிரியையிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.வீட்டுப்பாடம் முடிக்காத 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை தாறுமாறாக தாக்கிய சம்பவம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web