கொதிக்கும் பாலை முதலாளி முகத்தில் ஊற்றிய டீமாஸ்டர்!! பகீர் பிண்ணனி!!

 
அருண்

சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருபவர் அருண். இவருக்கு வயது 44. இவர் தேனாம்பேட்டை போயஸ் சாலையில் டீக்கடையை 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த டீக்கடையில் டீமாஸ்டராக  தேனாம்பேட்டையில் வசித்து வரும்  பெரியபாண்டி கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வயது 28. 

தேநீர்

இந்நிலையில் டீக்கடை உரிமையாளர் அருண், டீ மாஸ்டர் பெரியபாண்டியை அழைத்து, நீ வேலையை விட்டு சென்றுவிடு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெரியபாண்டி, அருணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய பெரியபாண்டி, டீக்கடையில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாலை எடுத்து உரிமையாளர் அருண் மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அருணை மீட்டு  சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு 20 தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அருண் சிகிச்சை பெற்று வருகிறார். 

போலீஸ்

இந்த சம்பவம் குறித்த டீக்கடை உரிமையாளர் அருண், தேனாம்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து தலைமறைவான டீ- மாஸ்டர் பெரியபாண்டி மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web