திருட சென்ற இடத்தில் மொபைலை அங்கேயே விட்டு விட்ட திருடன்!!

 
திருடன்


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சித்திரவேல் வழக்கம் போல் இரவு ஓட்டலை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார்.
அப்போது இரவு நேரத்தில் ஓட்டலுக்குள் புகுந்த திருடனின் அட்டகாசங்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளான். அந்த வீடியோவில், ஓட்டலுக்குள் புகுந்த திருடன் இருட்டில் டார்ச் அடித்துக் கொண்டே பொருட்களை தேடி தேடி திருடுகிறான்.

நீட் தேர்வில் முதலிடம்! நாமக்கல் மாவட்டம் அசத்தல்!

முதல் கட்டமாக அங்கிருந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்றான். அதை  அதை நகர்த்த முடியாமல் போனதால், அதனை அப்படியே விட்டுவிட்டான். அதன் பின்னர் ஓட்டலில் உள்ள கல்லாவுக்கு சென்ற நிலையில், தன்னுடைய செல்போனில் சார்ஜ் தீர்ந்து போனது நினைவுக்கு வந்தது. உடனடியாக அங்கிருந்த சார்ஜரில் தனது செல்போனை சார்ஜ் போடுகிறான். பின்னர் கல்லாப் பெட்டியைத் திறந்த திருடன் அதில் இருந்த ரூ.20000 அபேஸ் செய்துள்ளான். பணத்தை பார்த்த ஜோரில் தன்னுடைய செல்போனை அங்கு சார்ஜ் போட்டதை திருடன் மறந்துவிட்டு பணத்துடன் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

போலீஸ்

ஓட்டலில் கொள்ளை போன விவகாரம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கிருந்த கண்காணிப்பு காட்சிகளை வைத்தும், அவன் விட்டுசென்ற செல்போனை வைத்தும் திருடனை எளிதாக பிடித்துவிடலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். திருடன் தடயம் எதையாவது விட்டு சென்றானா என்று போலீசார் தேடுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் திருடனே தனது செல்போனை விட்டு சென்ற சம்பவம் வேடிக்கையாக உள்ளதாக அங்கிருந்தவர்கள் நகைச்சுவையுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web