தொடரும் சோகம்!! 3 வது மாடியிலிருந்து குதித்து மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை!!

 
கண்ணன்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (25). இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் மருத்துவ மாணவர் விடுதியின் பார்க்கிங் பகுதியில் கை, கால்களில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார்.

கண்ணன்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏழுகிணறு போலீசார் உயிருக்கு போராடி கொண்டிருந்த கண்ணன மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவரது அறையின் 3-வது மாடியில் இருந்து விழுந்திருப்பதாக தெரியவந்தது. அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கண்ணன்

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்த கண்ணன் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் ஏழுகிணறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 1.30 மணி வரை பணிபுரிந்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web