புல்லட் ஓட்டும் ஆசையில் புது மாப்பிள்ளை செய்த வேலை! கதறியழுத புதுப் பொண்டாட்டி!

 
அப்துல் ரஷீத்

புல்லட் ஓட்டும் ஆசையில், புதுமாப்பிள்ளை செய்த வேலை உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தனது கணவன் மீது அத்தனை பாசமும், நம்பிக்கையும் வைத்திருந்த புது மனைவி கதறியழுது தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார். புதுமாப்பிள்ளையான அப்துல் ரஷீத்,  தனது மனைவியின் 17 சவரன் நகைகளை திருடிவிட்டு, கொள்ளை போனதாக நாடகமாடிய சம்பவம் சென்னை புதுப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புதுப்பேட்டையில் வசித்து வருபவர் அப்துல் ரஷீத். இவருக்கு வயது 27. ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். மேலும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலையையும் செய்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தான் அப்துல் ரஷீத்திற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. ரஷீத்தின் மனைவி கிண்டியில் இயங்கி வரும்  தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அப்துல் ரஷீத் மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த மாதம் 25ம் தேதி காலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் அன்று மாலை அப்துல் ரஷீத் வீட்டிற்கு வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து வந்த மனைவியிடம், வீட்டில் கொள்ளை போயிருக்கிறது. தான் வீட்டிற்கு வருவதற்கு முன்னதாகவே கொள்ளையர்கள் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 17 சவரன் நகைகளை திருடிச் சென்றுவிட்டார்கள் என்று கூறி புலம்பி இருக்கிறார்.

திருட்டு நகைகள் கொள்ளை

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்துல் ரஷீத் வீட்டு அருகில் பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திருட்டு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நாளன்று (25ம் தேதி) சந்தேகப்படும் வகையில் அவரது வீட்டிற்கு யாரும் வந்து போனதாக காட்சிகள் ஏதும் பதிவாகாததால் போலீசார், அப்துல் ரஷீத் மீது சந்தேகம் அடைந்தனர். மேலும் மதிய வேளையில் அப்துல் ரஷீத் மட்டும் வீட்டிற்கு வந்து செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. 

இதனால் போலீசாரின் சந்தேகப்பார்வை அப்துல் ரஷீத் மீது அழுத்தமாக பதிந்தது. இதனால் போலீசார் அப்துல் ரஷீத்திடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணை இறுதியில் அப்துல் ரஷீத், தான் தனது சொந்த வீட்டிலேயே, புதிதாக புல்லட் வாங்குவதற்காக மனைவியின் 17 சவரன் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார்.

நகை திருட்டு

புல்லட் பைக் மீது கொண்ட ஆர்வத்தால் நீண்ட வருடங்களாக அதனை வாங்க அப்துல் ரஷீத் முயற்சித்துள்ளார். ஆனால் அது நடக்காமல் போனதால் கவலை அடைந்துள்ளார். பின்னர், திட்டமிட்டு மனைவியின் 17 சவரன் நகைகளை திருடி புல்லட் வாங்க முடிவு செய்து, நகைகள் திருடு போனதாக நாடகமாடி மனைவி மற்றும் போலீசாரை திசை திருப்ப முயற்சித்ததும் தெரிய வந்தது.

அப்துல் ரஷீத்துக்கு உடந்தையாக இருந்த அவரது சித்தப்பா மகன் முகமது சாயிப் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். புல்லட் வாங்க வேண்டுமென்ற ஆசையில் மனைவியின் நகைகளை திருடி நாடகமாடிய சம்பவம் அப்துல் ரஷீத்தின் குடும்பத்தினர் மற்றும் புதுப்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web