கோவிலில் திருடிய 7 சிலைகளை போட்டுவிட்டு தப்பியோடிய திருடர்கள்!! போலீஸ் வலைவீச்சு!!

 
ஐம்பொன் சிலைகள்

ஆவடி அடுத்த பட்டாபிராம் முல்லை நகரில் முத்துமாரியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. ஜூன் 16ம் தேதி இரவு கோவிலை பராமரிப்பாளர் பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் வழக்கம் போல கோவிலை திறக்க நேற்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கோவில் பராமரிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார்.

ஐம்பொன் சிலைகள்

பின்னர் கோவிலுக்குள் சென்று பார்த்த போது, முத்து மாரியம்மன் சிலை, உற்சவர் சிலை, முருகன் சிலை, வள்ளி தெய்வானை சிலை ஆகிய 4 ஐம்பொன் சிலைகளும், மேலும் திருடப்பட்ட முத்துமாரியம்மன் சிலை கழுத்தில் அணிவித்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ஊர்மக்கள் கோவில் முன்பு கூடினார்கள்.

கோவிலுக்குள் இரவு புகுந்த மர்ம நபர்கள் இவற்றை எல்லாம் திருடி சென்று இருப்பது தெரிய வரவே, கோவில் பராமரிப்பாளர் விரைந்து இதுபற்றி தகவலறிந்த பட்டாபிராம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார்,  பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். 

ஐம்பொன் சிலைகள்

அப்போது சென்னை செல்லும் ரயில் பிளாட்பாரத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தலாம் என்று போலீசார் அவர்களை நோக்கி செல்லும் போது, பயந்து போன திருடர்கள், தாங்கள் வைத்திருந்த கோணிப்பையை கீழே போட்டு விட்டு 5 பவுன் தங்க சங்கிலியை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்கள். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

திருடர்கள் போட்டுவிட்டுச் சென்ற கோணிப்பையை போலீசார் திறந்து பார்த்த போது, அதில் அம்மன் கோவிலில் திருடப்பட்ட 4 சிலைகளும், அத்துடன் பட்டாபிராம் ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் அருகே தண்டுரை பகுதியில் அமைந்துள்ள ராகவேந்திரா கோவிலில் திருடப்பட்ட 3 ஐம்பொன் சிலைகளும் இருப்பதை கண்டுபிடித்தனர்.

கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 7 சிலைகளையும் மீட்ட போலீசார் அவற்றை கோவில் நிர்வாகத்திடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பட்டாபிராம் குற்றப்பிரிவு போலீசார் தப்பியோடிய குற்றவாளிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.மேலும் சிலைகளை ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்த திருடர்கள் அவற்றை எங்கே கடத்தி செல்ல இருந்தனர்? மேலும் அவர்களது கூட்டாளிகள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web