உங்க கடன்களை சுலபத்துல தீர்த்து வைக்கும் மந்திரம் இது தான்!

 
பணம்

எத்தனைக் கோடி கடன் இருந்தாலும், இதை மட்டும் செய்து பாருங்க. சுலபத்துல உங்களோட கடன் எல்லாம் அடைஞ்சுடும். ஆனா, நம்பிக்கையோட ஆத்மார்த்தமா செய்யணும். கடனை அடைக்க வேண்டும் என்று  முழு மனதுடன் இதைச் செய்ய வேண்டும். இந்த உலகில் நிம்மதியான வாழ்க்கை வாழ்பவர்கள் எத்தனை பேர் என்று விரல் விட்டு எண்ணி விடலாம்.  அதே போல் கடன் இல்லாமல் வாழ்பவர்களையும் எண்ணி விடலாம். நூற்றில் 95 சதவிகிதம் பேர் கடனாளியாக தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது ஏழையாக இருந்தாலும் சரி, கோடிஸ்வர செல்வந்தராக இருந்தாலும் சரி. ஆனால் பிரச்சனை நிச்சயமாக கடனாளியாக இருப்பது பிரச்சனை கிடையாது. கடனாளியாகவே வாழ்நாள் முழுவதும் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பது தான் பெரிய பிரச்சனை.

முதலில் உங்கள் கடனை எல்லாம் ஒரு திட்டமிட்ட வரைமுறைக்குள் கொண்டு வாருங்கள். திருப்பி செலுத்துகிற சக்தி இல்லாமல் கடன் வாங்காதீர்கள். 10 லட்ச ரூபாய் மதிப்புடைய  காரை பழசாகி விட்டது என்று வந்த விலைக்கு விற்று விட்டு, கடனில் 50 லட்ச ரூபாய் கார் வாங்காதீர்கள். உங்களிடம் பணம் அதிகப்படியாக இருந்தாலுமே இப்படி செய்வது தவறு என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சரி... இதற்கும் செவ்வாய் கிழமைக்கும் என்ன சம்பந்தம்?

அதிர்ஷ்டம் தரும் ஆடிவெள்ளி அம்பிகை வழிபாடு!

செவ்வாய் கிழமை பொதுவாகவே அம்பிகைக்கு உகந்த நாள். நவக்கிரகங்களுள் மிகச்சிறந்தது செவ்வாய் தான். இது தான் மங்கலகரமான கிரகம். செவ்வாய்க் கிழமையன்று எதையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழுப்பலனை அனுபவிக்கவே முடியாது என்றும் சொல்வதுண்டு. முருகப் பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான்.

திங்கள், புதன், வியாழன், வெள்ளி நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஏற்ற நாள் என்று நினைப்பார்கள். ஆனால் நல்ல நாளாக இருந்தாலும் பிரதமை, அஷ்டமி, நவமி திதிகள் வரும் நாட்களைத் தவிர்க்க வேண்டும். செவ்வாய்கிழமையும் உகந்த நாள் தான்.

மெளன அங்காரக விரதம் ஒன்று உண்டு. தர்ம சாஸ்திரத்தில் இதைப் பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று மெளன விரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை ஒருவர் அடையலாம் என்கிறது.

அதாவது செவ்வாய்க் கிழமையன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது. அப்படி விவாதம் செய்தால் அது நிச்சயம் தீமையில் சென்று முடியும். அதனால் தான் செவ்வாயோ வெறும் வாயோ என்று, அன்றைய தினம் வாதம் செய்யாமல் மெளன விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது தான் உண்மையான பழமொழி.

முருகன்

இயற்கையிலேயே செவ்வாய் விசுவாசம் நிறைந்த பணியாளாக இருந்தாலும் மூர்க்க குணம் நிறைந்தவர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதையும் யோசிக்காமல் வேகமாக செயல்படக்கூடியவர். அன்றைய தினம் நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால் தான் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பித் தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும். தொடர்ந்து மூன்று செவ்வாய் கிழமைகளில் உங்கள் கடனின் ஒரு பகுதியைக் கொடுத்து வர, கடன் விரைவில் அடைப்படும்.

மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்று கூறுவதுண்டு. இந்த நாளில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம் , சஷ்டி அப்த பூர்த்தி போன்றவற்றைச் செய்யலாம். மனையடி சாஸ்திரம் செவ்வாயன்று பூமி பூஜை செய்வது நல்லது என்றே கூறுகிறது. பயணங்களில் கிழக்கு திசை நோக்கிய பயணம், செவ்வாயன்று இருந்தால் உறுதியான வெற்றியைத் தரும். சரியாக இன்றிலிருந்து திட்டமிட்டு உங்கள் வாழ்க்கைக்கான வெற்றியை அமைத்துக் கொள்ளுங்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web