சோகம்! ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து! பலியான 9 பேர் யார்?
காரில் சுற்றுலா சென்ற பயணிகள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் சென்ற கார், ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பெரும் விபத்து நிகழ்ந்தது.
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த 10 பேர் ஒரு பெரிய காரில் சுற்றுலா சென்றனர். சுற்றுலா சென்ற பயணிகள் ராம்நகரில் உள்ள ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கி உத்தரகாண்டில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களை கண்டு ரசித்தனர்.
இந்நிலையில் தாங்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு காரில் புறப்பட்டனர். தேலா ஆற்றின் வழியாக கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஏற்கனவே அப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது.
Nine killed as car washed away by Dhela river in Uttarakhand's Nainital district: police. 9 tourists from #Punjab dead as car washed away in Dhela river at #Ramnagar in #Nainital on Friday early morning. One girl rescued. #Patiala #Patialahelpclub pic.twitter.com/tTQLL2RSLK
— Puneet Singh Banga Patiala Helpclub (@puneet_banga) July 8, 2022
இதனால், ஆற்று வெள்ளத்தில் விபத்துக்குள்ளான கார் வேகமாக அடித்துச் செல்லப்பட்டது. இதில், காரில் பயணித்த 10 பேரில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி உள்ளூர் போலீசார் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு கிரேன் வரவழைக்கப்பட்டு ஆற்றில் இருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரில் 6 பெண்கள் மற்றும் 3 இளைஞர்கள் ஆவர். மேலும் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது அவர் ராம்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரில் இறந்து கிடந்த பஞ்சாப் மாநில சுற்றுலா பயணிகள் 9 பேரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து பஞ்சாப் மாநில போலீசார் மற்றும் அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் சென்ற கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வழக்கில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரகாண்ட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!