சுவர் இடிந்து விழுந்ததில் மாற்றுத்திறனாளி அக்கா தங்கை இருவர் பலி!! திருப்பத்தூரில் சோகம்!!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மண்டலநாயன குண்டா பகுதியை சேர்ந்தவர்கள் ராமசாமி சின்னம்மா தம்பதியினர். இவர்களின் மகள்கள் நாகம்மாள், சுந்தரி. காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளான மூதாட்டிகள் இவர்களுக்கு திருமணம் ஆகாத நிலையில் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர். பல ஆண்டுகளாக தங்களுக்கு ஒரு வீடு வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் குடிசை வீட்டில் இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மாற்றுத்திறனாளிகளான அக்கா, தங்கை இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பின்னர் இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் துறையினர் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏழை மாற்றுத்திறனாளிகளான அக்கா தங்கை இருவரும் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!