கஞ்சா விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்த இருவர் வெட்டி படுகொலை!! திண்டுக்கலில் பயங்கரம்!!

 
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம்  வத்தலகுண்டு காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு மணிகண்டன், சபரீஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இவரும் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி, கொண்டாநகரம் பகுதிகளில் ஆட்டோவில் வெங்காய வியாபாரம் செய்து வந்தனர்.

திண்டுக்கல்

ஜூன் 10ம் தேதி பெற்றோரிடம் பேசிய மணிகண்டன் அதன்பின் தொடர்பு கொள்ளவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த சிலர் அப்பகுதியில் வெங்காய வியாபாரம் செய்கின்றனர். சந்தேகமடைந்து அவர்களிடம் விசாரித்த நாகராஜ் மகன்களை காணவில்லை என சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் அப்பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, மணிகண்டன், சபரீஸ்வரனை அப்பகுதி சேர்ந்த சதீஷ்குமார், சகோதரர் பார்த்திபன் ஆட்டோவில் அழைத்து சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் இவரையும் விசாரித்த போது மணிகண்டன், சபரீஸ்வரனை கொலை செய்ததை ஒப்பு கொண்டனர்.

dead body

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, ‘சதீஷ்குமாரின் தந்தை சுப்பையா கொண்டாநகரத்தில் காய்கறி வியாபாரம் செய்கிறார். அங்கு வெங்காய வியாபாரம் செய்த மணிகண்டனுக்கும் சதீஷ்குமாருக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் கஞ்சா மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாயினர். மணிகண்டனுக்கு சீட்டு ஆட்டத்தில் கடன் ஏற்பட்டதால் சதீஷ்குமாரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினார். அதனை சதீஷ்குமார் அடிக்கடி திரும்ப கேட்டதால் கோபமடைந்த மணிகண்டன், சதீஷ்குமார் கஞ்சா விற்பது குறித்து பேட்டை காவல் நிலையத்தில் தெரிவித்தார். இதையடுத்து சதீஷ்குமாரை கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

இந்த முன்விரோதத்தில் மது அருந்தலாம் எனக்கூறி மணிகண்டனை அழைத்து சென்ற சதீஷ்குமார், பார்த்திபன் காட்டுப்பகுதியில் கழுத்தை நெரித்து கொன்றனர். சபரீஸ்வரனுக்கும் தெரியும் என்பதால் அவரையும் தனியாக அழைத்து சென்று கொலை செய்தனர். சதீஷ்குமார் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.” என்று கூறினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web