உஷார்! ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் 1999-ம் ஆண்டுக்கு பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் பெருகின. சென்னையின் ஐடி ஹப்பாக மாறிய பழைய மகாபலிபுரம் சாலை, 2008-ம் ஆண்டு ‘ஐடி எக்ஸ்பிரஸ் வே’ வாக மாறியது. மத்திய கைலாஷில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறுசேரி வரை 20 புள்ளி 1 கிலோமீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய 4 வழிப் பாதை அமைக்கப்பட்டது.
மேடு, பள்ளங்கள் இன்றி பளபளக்கும் சாலை, இரவை பகலாக்கும்படியான விளக்குகள், முறையான போக்குவரத்து குறியீடுகளுடன் அமைக்கப்பட்ட ஓ.எம்.ஆர். சாலையில், பெருங்குடி, நாவலூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கறை ஆகிய பகுதிகளில் 5 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி நாவலூர் சுங்கச் சாவடியில் ஆட்டோ ஒருமுறை பயணிக்க கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.11-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் கார்களுக்கான கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.33-ஆகவும், இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ.49-ல் இருந்து ரூ.54 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்துக்கான கட்டணம் ரூ.78-ல் இருந்து ரூ.86-ஆகவும், சரக்கு வாகனங்களுக்கு ரூ.117-ல் இருந்து ரூ.129-ஆகவும், பல அச்சு வாகனத்திற்கு ரூ.234-ல் இருந்து ரூ.258-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு வருகின்ற ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, கார், ஜீப் ஒரு முறை சென்று திரும்ப ரூ.22, ஒருநாள் முழுவதும் பல முறை பயணிக்க 37 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆட்டோ, கார், ஜீப் ஆகியவை மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை ரூ.345 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்களுக்கு மாதம் முழுவதும் பயணிக்க பயண அட்டை ரூ.3,365 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம் சுங்கச் சாவடி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!