உஷார்!! இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் மழை!!

 
மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் குறைந்தபாடில்லை. தற்போது மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவி வருகிறது.

மழை

இதன் காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அனல் காற்றும் வெப்பமும் நிலவும். இருப்பினும் சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மட்டும் லேசானது  முதல் மிதமான மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 38- முதல் 39 டிகிரி செல்சியசுக்கு அதிகபட்ச வெப்பம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மழை
சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, -கர்நாடக கடலோரப்பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலமாக வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web