மறுபடியும் மொதல்..ல இருந்தா!! ! ஒரே நாளில் 5000க்கும் அதிகமாக பதிவான கொரோனா!!
இந்தியாவில் ஜூன் மாதத்தில் கொரோனா 4 வது அலை பரவக் கூடும் என கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கேற்றாற் போல் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் வரை 3714 ஆக இருந்து வந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5233 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,90,282 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் கொரோனா உயிரிழப்பு கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,715 ஆக பதிவாகியுள்ளது.
அதைப்போல,கடந்த ஒரே நாளில் 3,345 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 28,857 பேர். இந்தியாவில் இதுவரை 1,94,43,26,416 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!