வடிவேலு பட நடிகருக்கு ஆயுள்தண்டனை!! போக்சோ நீதிமன்றம் அதிரடி!!

 
நாச்சியப்பன்

மதுரையை அடுத்த சோழவந்தான் அடுத்த முள்ளிப்பள்ளம் காமராஜர் தெருவில் வசித்து வருபவர்  பக்தன் என்கிற நாச்சியப்பன் (49). இவர், 'எலி' உள்ளிட்ட திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் துணை நடிகராக நடித்து உள்ளார்.

பாலியல் வன்கொடுமை

இவர், கடந்த 2017-ம் ஆண்டு சிறுமி ஒருவரை ஏமாற்றி மிட்டாய் மற்றும் பலகாரம் வாங்கிக் கொடுத்து ஒரு மாதத்திற்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதனைக் கண்ட தென்கரையைச் சேர்ந்த டிரைசைக்கிள் ஓட்டுநரான மணிகண்டனும் (28) சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். 

இதுகுறித்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பக்தன் என்கிற நாச்சியப்பன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 

சிறை

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இவ்வழக்கிற்கு அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார். விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்ட நாச்சியப்பன், மணிகண்டன் ஆகியோர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இருவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web