வீடியோ!! கையில் குழந்தையுடன் மொபைல் திருடும் தம்பதி!! பகீர் சிசிடிவி புட்டேஜ்!!

 
ஆத்தூர்

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே  பாத்திரக் கடை ஒன்று இயங்கி வருகிறது. அந்த கடைக்கு நேற்று காலை வெளியூரில் இருந்து பொருட்கள் வந்து இறங்கியது. அதனை கடலூரை சேர்ந்த பாலமுருகன் என்ற ஓட்டுனர் இயக்கி வந்தார்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் பாலமுருகன் வண்டியின் முன் பகுதியில் தனது 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போனை வைத்து விட்டு வண்டி மீது ஏறி தார்ப்பாய் போட்டு பொருட்களை பத்திரப்படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த தம்பதி வண்டியின் முன்பகுதியில் செல்போன் கிடப்பதை கவனித்தனர். பின்னர் மனைவியை முன்னே செல்ல சொன்ன கணவர் குழந்தையுடன் அந்த செல்போனை அபேஸ் செய்து கொண்டு அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்கில் பரவி வைரலாகி வருகிறது.

இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் செல்போன் திருடப்பட்ட துணிகர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web