வீடியோ!! மனு கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய திமுக அமைச்சர்!!!

 
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் பொது மக்கள் மனு கொடுக்க கூட்டமாக திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொகுதி மக்களிடம் இருந்த மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மனு கொடுத்த ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது அவரை தான் கையில் வைத்திருந்த கடித உறையால் தாக்கினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோவை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



மேலும் தனது பதிவில், ‘‘மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? என்று தலைப்பிட்டு, விருதுநகர், பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை தாக்கிய அமைச்சர் கே.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தான் செய்த தவறுக்காக வருந்தி அடுத்த 48 மணிநேரத்திற்குள் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்

மீறினால் அவரது வீட்டை தமிழக பா.ஜ.க. தொண்டர்கள் முற்றுகையிடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.இதனால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ட்விட்டரில் வெளியிடப்பட்ட அமைச்சரின் வீடியோவை பலர் ஷேர் செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web