வீடியோ! ரசிகர்கள் திடீர் ரகளை! கலவரத்தில் 127 பேர்! 180 பேர் படுகாயம்!

 
கால்பந்து

தங்களது அபிமான அணி, கால்பந்து போட்டியில் தோல்வியடைந்ததால், மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 127 பேர் பலியானார்கள். விளையாட்டு வினையானதுன்னு சொல்வாங்க இல்ல... அந்த மாதிரி இந்தோனேசியாவில், கால்பந்து விளையாட்டு மைதானம் திடீரென ஏற்பட்ட கலவரத்தில், ரணகள பூமியாக மாறியது. இந்தோனேசியாவில், ஒரு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கால்பந்து போட்டியில் திடீரென ரசிகர்களுக்கிடையே கலவரம் ஏற்பட்டது.


இந்த கலவரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் 127 பேர் பலியானார்கள். ஆமாங்க.. தப்பா எல்லாம் டைப் பண்ணலை. இந்த ரசிகர்களின் கலவரத்தால், 127 பேர் பலியானார்கள். 180க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தோனேசியா கிழக்கு ஜாவா பகுதியில் கால்பந்து போட்டி நடைபெற்று வந்தது. அந்த போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தில் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக 127 உயிரிழந்துள்ளனர்.
indonesia football
இந்த கலவரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கியும், மிதிப்பட்டும் 34 பேர் மைதானத்திலேயே உயிரிழந்து உள்ளனர். மேலும், 2 காவல்துறையினர் உள்ளிட்ட 93 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தங்களது அபிமான அணி, கால்பந்து போட்டியில் தோல்வியுற்றதைத் தாக்கிக் கொள்ளாத ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், ரசிகர்களின் கலவரத்தைத் தடுக்க, பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை வீசியதாகவும் தெரிகிறது. ரசிகர்களின் இந்த கலவரத்தையடுத்து, எஞ்சிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web