வீடியோ! தயவு செஞ்சு விட்டுடுங்க.. கதறியழுத திருடன்! வெச்சு செஞ்ச பயணிகள்!
ரயில் ஜன்னல் வழியே செல்போன் திருட முயன்ற திருடனை பயணிகள் அனைவரும் சேர்ந்து கொண்டு சுமார் 15 கிலோ மீட்டர் கதற கதற வெச்சு செய்திருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தில் ஜாமல்பூர்-சாகிப்காஞ்ச் பயணிகள் ரயில் லைலாக் பகுதியில் சென்ற போது, ரயிலின் ஜன்னல் வழியாக ஒரு பயணியிடமிருந்து செல்போனை திருடன் பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது பயணி திருடனின் கையையும், பணியனையும் லாவகமாக பிடிக்க ரயில் வேகமாக செல்ல தொடங்கியிருக்கிறது. வெளியே தொங்கிய திருடன் தன்னை காப்பாற்றுமாறும் தனது கைகளை விட்டுவிட வேண்டாம் என்றும் கொஞ்சி உள்ளார்.
இதை மற்ற பெரெத்தில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். ஆத்திரமடைந்த பயணிகள் திருட வந்தவரை உள்ளே இழுத்து வந்து அறைந்து, அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Bad day for this thief.
— Dhiren Patel (@DhirenP66827872) September 15, 2022
He was trying to snatch mobile but caught in the hands of The Family man 🤣😂 in Samastipur-Katihar Passenger Train
Later he was handed over to Police#Begusarai #Bihar #ViralVideo pic.twitter.com/myS1CY7tXK
இதேபோன்ற ஒரு சம்பவம் பிகாரில் உள்ள பெகுசராய் பகுதியில் கடந்த 14-ம் தேதி நிகழ்ந்துள்ளது. செல்போனை திருட முயற்சித்தபோது, ரயில் நகர தொங்கிவிட்டது. இதையடுத்து, ஓடும் ரயிலின் ஜன்னலில் தொங்கியபடி திருடன் பயணிகளிடம் பிடிபட்டார். தன்னை கீழே விட்டு வேண்டாம் என கெஞ்சிய படி திருடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!