குளிக்கும் போது வீடியோ! குடியிருந்த இளம்பெண்ணை மிரட்டி லட்சங்களில் பணம் பிடுங்கிய ஹவுஸ் ஓனர்!

 
செக்ஸ் பாலியல் க்ரைம் ஆபாசம் கற்பழிப்பு

திருமணமான இளம்பெண் ஒருவர் தங்கியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளர், செய்த செயல் போலீசாரையே அதிர வைத்திருக்கிறது. கணவர் வெளிநாட்டில் வேலைப் பார்ப்பதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட வீட்டு உரிமையாளர், ரகசியமாக அந்த இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, லட்சக்கணக்கில் மிரட்டி, பணம் பறித்துள்ளார். ராமநாதபுரம், பரமக்குடியில் வசித்து வருபவர் தமிழ்மணி. இவர் வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு சென்று விட்டார். அதற்கு முன்னதாக  இவர் தனது  மனைவியை ரூ.2 லட்சத்துக்கு ஒரு வீட்டை லீஸ் எடுத்து தங்க வைத்துள்ளார். அந்த வீட்டில் கடந்த 1 வருடமாக தமிழ்மணியின் மனைவி வசித்து வருகின்றார். வீட்டிற்கு லீஸ் பணம் கொடுத்ததற்கான எந்த ஆவணத்தையும் வீட்டு உரிமையாளர் எழுதி தரவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் தமிழ்மணியின் மனைவி, வீட்டு உரிமையாளரிடம் கடனாக ரூ.50 ஆயிரம் வாங்கியுள்ளார். இந்த கடனை பெற்ற போது வெற்று புரோ நோட்டில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து தமிழ்மணியின் மனைவி கேட்ட போது, லீஸ் பத்திரத்தை தரும் போது இதை திருப்பித் தருகிறேன்’’ என்று பதில் அளித்துள்ளார்.

இதற்கிடையில் வீட்டு உரிமையாளரிடம் மீண்டும் 10 வட்டிக்கு ரூ.3 லட்சம் அளவிற்கு தமிழ்மணியின் மனைவி கடன் வாங்கியுள்ளார். எனவே கடனை உடனடியாக திருப்பி தரச் சொல்லி வீட்டு உரிமையாளர் இளம் பெண்ணிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

செல்போன் பலான படம் ஆபாசம் கற்பழிப்பு செக்ஸ்

பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழ்மணியின் மனைவி குளிப்பதை மறைமுகமாக செல்போனில் படம் பிடித்து அதனை வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழ் மணிக்கு அனுப்பி விடுவதாகக் கூறி மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் செய்வதறியாது தவித்துள்ளார்.

இந்நிலையில், நாளுக்கு நாள் வீட்டு உரிமையாளரின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது. மிரட்டலுக்கு பயந்து நகைகளை அடகு வைத்து இதுவரை ரூ.16.90 லட்சம் வரை வீட்டு உரிமையாளர் பறித்து விட்டதாகவும் வீட்டை காலி செய்ய விடாமலும், ரூ.15 லட்சம் பொருட்களை எடுக்க விடாமலும் அடியாட்களை வைத்து வீட்டு உரிமையாளர் மிரட்டியதாக தெரிகிறது.

ரகசிய அறை

இதனால் பொறுமையை இழந்த இளம் பெண், ராமநாதபுரம் எஸ்.பி. மற்றும் பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளரிடம் வீட்டு உரிமையாளர் மீது பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் குறித்து பரபரப்பு புகார் அளித்தள்ளார். மேலும் வீட்டு உரிமையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். வீட்டு உரிமையாளர் என்ற போர்வையில் குளியலறையில் ரகசியமாக செல்போன் வைத்து வீடியோ எடுத்த சம்பவம் பரமக்குடியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web