காதலனுடன் விடிய விடிய செல்போன் பேச்சு! வீடியோவை ஆன் செய்தபடியே தூக்கில் தொங்கிய இளம் பெண்!

 
நிஷா

செல்போனில் வீடியோவை ஆன் செய்து விட்டு, தூக்கு மாட்டி இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரவாயல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதி, தொட்டி துறையில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தனது வீட்டு அருகிலேயே பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு 21 வயதில் நிஷா என்ற ஒரு மகள் இருந்தார். டிப்ளமோ படித்த நிஷா, சென்னை அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே, மதுரவாயல் லட்சுமி நகரில் தனது தோழியுடன் வீடு எடுத்து தங்கி இருந்தார்.

இந்நிலையில் குடியாத்தத்தில் இருந்த நிஷாவின் தந்தை வெங்கடேசனுக்கு கடந்த 25ம் தேதி ஒரு போன் வந்துள்ளது. போனில் நிஷா தங்கியிருந்த வீட்டின் ஓனர் பேசினார். அவர், உங்கள் மகள் நிஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே நீங்கள் உடனே வாருங்கள் என்று போனை துண்டித்தார். இதைக் கேட்ட வெங்கடேசன், நிஷா அறையில் தங்கியிருந்த அவரது தோழியிடம் விசாரித்த போது தனக்கு வந்த செய்தி உண்மை தான் என்பதை அறிந்து அழுது புரண்டார்.

நிஷா

மேலும் நிஷாவின் தோழி கூறும் போது, ‘‘போனில் விடிய, விடிய பேசிய நிஷா, தன் அறைக்கு கிளம்பி சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டு சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். அப்போது நிஷாவின் போன் வீடியோ எடுத்தபடியே இருந்தது என்று தெரிவித்தார்.

சென்னை மதுரவாயலுக்கு விரைந்து வந்த வெங்கடேசன் மற்றும் அவரது குடும்பத்தினர், போலீசில் நிஷா எடுத்த வீடியோவையும், புகார் மனுவையும் அளித்தனர். அதில், ‘‘நள்ளிரவு 3 மணிக்கு தனது மகள் நிஷா தான் தூக்கு போட்டுக் கொண்டதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். மேலும் தற்கொலைக்கு முன்னர் ஏதோ ஒரு வாலிபருடன் அவர் நீண்ட நேரம் பேசியதும் செல்போனில் பதிவாகி இருக்கிறது. மேலும் போலீசாரின் விசாரணையில், அது நிஷாவின் காதலன் என்பது தெரிந்துள்ளது. எனவே எனது மகள் நிஷாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று’’ கூறியிருந்தார்.

நிஷா

புகாரை பெற்றுக் கொண்ட மதுரவாயல் போலீசார், நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நிஷா பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்த போலீசார், தீவிரமாக ஆய்வு செய்து அவரது காதலினிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். காதலனிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகே நிஷாவின் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், சோகமும் ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web