வைரல் வீடியோ!! ஷூவுக்குள் நின்று நடனம் ஆடும் நாகப்பாம்பு!!

 
ஷூவுக்குள் நாகப்பாம்பு

இன்றைய வாழ்க்கை முறையில் பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அலுவலகம் செல்லும் அப்பா , வாக்கிங்க் செல்லும் தாத்தா பாட்டிகள் அனைவரும் ஷூ அணிந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். வெளியில் கிளம்பும் போது டிப்டாப்பாக இருந்தாலும் ஷூவை சரியான முறையில் பராமரிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் சில விரும்பத்தகாத விஷயங்கள் நடந்து விடும் வாய்ப்புக்கள் அதிகம். அப்படி தான் மைசூரில் பகீர் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 

கர்நாடக மாநிலம் மைசூரில் ஒருவர் தனது ஷூவை வீட்டு வாசலில் கழற்றி விட்டு சென்றார் . வார விடுமுறை முடிந்து இன்று திங்கட்கிழமை அலுவலகம் செல்லத் தயாரானார்.  இன்று காலையில் அவர் வந்து பார்த்தபோது, ஷூவுக்குள் ஏதோ ஒரு சத்தம் வந்துள்ளது. உடனடியாக அந்த நபர் ஷூவை உற்று நோக்கியபோது, ஷூவுக்குள் நாகப்பாம்பு ஒன்று ஒளிந்திருப்பதைப் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், பாம்பு பிடிப்பவரும் பாம்பை பிடிக்க முற்பட்டனர். அப்போது, அது ஷூவுக்குள்ளிருந்து வெளியே எகிறி வந்து படமெடுத்து ஆடியது. 

இதனையடுத்து, பாம்பு பிடிப்பவர் அதை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்து கொண்டு சென்றார். இது குறித்த  வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்தனர், இது பயங்கரமான சம்பவம், காக்கும் பணியை சிறப்பாக செய்துள்ளீர்கள்.. என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web