வைரல் வீடியோ!! பிச்சை எடுத்து திரியும் பிரபல நடிகை!!
90களில் தொலைக்காட்சி தொடர்களில் சக்திமான் தொடர் குழந்தைகள், பெரியவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நுபுர் அலங்கார். இவரது கணவர் அலங்கார் ஸ்ரீவத்சவாவும் நடிகர். சுமார் 27 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருக்கு வயது 49. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகி காவி உடை அணிந்து சன்னியாசம் பெற்று காவி உடை அணிந்து கொண்டார்.
அப்போது விடுத்த செய்திக்குறிப்பில் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை எனவும், இப்போது தான் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது உத்திரப்பிரதேசம் கோவர்தனில் காவி உடையில் பிச்சை எடுத்து வருகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சினிமாவை விட்டு விலகினாரே தவிர் அநுபுர் அலங்கர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இவர் தனது வாழ்க்கை குறித்த அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், அவர் தெருக்களில் பிச்சை எடுத்து வரும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் நடிகை நாள் முழுவதும் 11 பேரிடம் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒரு புகைப்படத்தில், பிச்சை எடுப்பதையும், மற்றொரு புகைப்படத்தில் தனது பிச்சைக் கிண்ணத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் இது தனது முதல் பிச்சை எனத் தெரிவித்துள்ளார். ''சில காலமாக எனது குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள். எனது குருவின் ஆலோசனையால் சன்னியாசத்தை ஏற்று பிச்சை எடுக்கிறேன். பிச்சை எடுப்பதால் கொஞ்சம் பணம் கிடைக்கிறது. தற்போது வாழ்க்கை இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது'' எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!