வைரல் வீடியோ!! ஓடும் ரயிலில் பெண்களுக்கு இடையே குடுமிப்பிடி சண்டை!!
வர்த்தக நகரமாம் மும்பையின் முக்கிய பகுதிகள் மின்சார ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தினசரி பணிக்கு செல்பவர்கள் பலரும் மின்சார ரயிலில் பயணம் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். வழக்கம் போல் இன்றும் மின்சார ரயிலில் பயணம் செய்த இரு பெண்கள் அமரும் இருக்கைக்காக முடியை பிடித்து கடுமையான சண்டை போட்டனர். இதனை அங்கிருந்த சக பயணிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில் தானே-பன்வெல் மின்சார ரயிலின் பெண்கள் பெட்டிக்குள் பெண்கள் ஒருவரையொருவர் மோதிக்கொள்வதைக் காணலாம்.
Fight between two female passengers over a seat in Mumbai Local Train. #MumbaiLocal #Fight #ViralVideo #Mumbai pic.twitter.com/A7GiedIUvJ
— AH Siddiqui (@anwar0262) October 6, 2022
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சண்டை போட்ட பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் அளித்த வாக்குமூலத்தில் டர்பே ரயில் நிலையத்தில் உள்ளூர் ரயிலில் இருக்கைக்காக 3 பெண் பயணிகளுக்கு இடையே சண்டை நடந்தது. சிறிது நேரத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிவிட்டது. தானேயிலிருந்து ரயிலில் ஏறிய ஒரு பெண்ணும் அவரது பேத்தியும், கோபர்கைரானில் ரயிலில் ஏறிய மற்றொரு பெண்ணும் ஏற்கனவே இருக்கைக்காக காத்திருந்தனர். டர்பே ரயில் நிலையத்தில் இருக்கை காலியானபோது பாட்டி தனது பேத்தியை இருக்கையில் அமர வைக்க முயன்றார். அதே நேரத்தில், மற்றொரு பெண்ணும் இருக்கையை அமர முயற்சி செய்தார். இதனால் இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
Vashi, Navi Mumbai | Few women started hitting each other following dispute over seat, a female staff was injured: S Katare, Senior Police Inspector, Vashi Railway Station, on scuffle b/w 3 women in a local train running from Thane to Panvel, today
— ANI (@ANI) October 6, 2022
(Pic 1:Screengrab;viral video) pic.twitter.com/A6bPR3phhA
பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மேலும் சில பயணிகளும் சண்டையில் சேர்ந்து கைகலப்பில் ஈடுபட்டனர், இதன் விளைவாக பெண்கள் பெட்டிக்குள் பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த சண்டையில் பெண் போலீஸ் உட்பட குறைந்தது 3 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. தகராறைத் தீர்க்க முயற்சி செய்த பெண் போலீசையும் சில பெண் பயணிகள் தாக்கினர். இதில் பெண் போலீசும் படுகாயமடைந்தார். அந்த வீடியோவில், 2 பெண் பயணிகளின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டத் தொடங்கியது. இந்த வாக்குவாதத்தில் பெண் போலீசை தாக்கிய 27 வயது பெண் பயணி ஒருவரை மும்பை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!