விரைவில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வை-பை இணைய சேவை! ஆய்வறிக்கை சமர்பிக்க உத்தரவு!

 
ரேஷன்

விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வை பை இணைய வசதி கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் இணைய தள சேவை பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால், அவர்களிடம் குறைந்தது 6 செல்போன் எண்களாவது பயன்பாட்டில் உள்ளது. அனைவரும் வாட்ஸ்-அப் போன்ற செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஜி-பே, போன் பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். செல்போன்களில் இணைய வசதியை பெறுவதால் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அதே நேரம் நகர்ப்புறங்களில் இணைய சேவையை பெறும் அளவுக்கு கிராமப்புறங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் வசிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த குறைபாட்டை தீர்க்கவும், கிராமப்புறங்களிலும் எளிதாக இணைய சேவையை 'வை-பை' மூலம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.

ration 2

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் மூலம் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 323 நியாய விலைக்கடைகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்து 27 கடைகள் பகுதி நேர கடைகளாக உள்ளன. 6,978 கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகிறது. 2 முதல் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒவ்வொரு கடையும் செயல்படுகிறது.

இந்த கடைகளில் இருக்கும் இட வசதிகள், வாடகை கட்டிடம் என்றால் உரிமையாளரின் ஒப்புதலை பெறுவது, கடைகள் அமைந்திருக்கும் இடங்களின் சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Ration Shop Queue

தற்போது கிராமப்புறங்களில் இணைய தளங்களின் வேகம் 50 முதல் 90 கிலோ பைட்சாகத்தான் உள்ளது. அரசின் வை-பை வசதி கிடைத்தால் இந்த வேகம் அதிகரிக்கும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கிராமப்புற மக்கள் ரேசன் கடைகளை இணைய தள மையங்களாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web