மனைவி, குழந்தைகளை ரம்பத்தால் அறுத்து கொடூரக் கொலை !! பரபரக்கும் சென்னை!!!

 
கொலை

சென்னை பல்லாவரத்தில்  பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகர் விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் 41 வயதான  பிரகாஷ். இவர்  நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி 39 வயது காயத்ரி. இவர்களுக்கு 13 வயதில்  நித்யஸ்ரீ  என்ற மகளும், 9 வயதில் 9 அரிகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.  நேற்று இரவு  குடும்பத்தினருடன் தூங்கச் சென்றனர். இன்று காலையில் நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.அக்கம்பக்கம் வசித்தவர்கள் பிரகாசின் வீட்டுக்கு சென்று குரல் கொடுத்த போதும்,  வீட்டு கதவை தட்டியபோதும்  யாரும் கதவை திறக்கவில்லை.

கொலை
இதனால் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பிரகாஷ், காயத்ரி, குழந்தைகள் நித்யஸ்ரீ, அரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மரம் அறுக்கும் ரம்பத்தால் அவர்களின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. ரத்த வெள்ளத்தில்  நால்வரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையின்படி  பிரகாஷ் மனைவி, மகன், மகளை கொன்று தானும் தற்கொலை செய்தது தெரிய வந்தது.


முதலில் பிரகாஷ் மனைவி மற்றும் குழந்தைகள் ஒவ்வொருவரின் தலையையும் ரம்பத்தால் கொடூரமாக அறுத்துள்ளார். இதில் அவர்கள் 3 பேரும் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். அதன் பிறகு பிரகாஷ் அதே ரம்பத்தால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்து கொண்டார். பிரகாசின் நாட்டு மருந்து கடையில்  கடந்த சில ஆண்டுகளாக  சரியான வியாபாரம் இல்லாததால் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார்.கொரோனா காரணமாக வியாபாரம் இல்லாததால் அவர் மேலும் நெருக்கடிக்கு ஆளானார்.  இதனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்தவே முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

கடன் தொல்லை அதிகரித்ததால் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்தார்.இது குறித்து  மனைவியிடம் ஆலோசித்த போது அவரும் கணவரி முடிவை ஏற்றுக்கொண்டார்.அதே போல் நேற்று இரவு மகன், மகள் இருவரும் தூங்கிய பின்  பிரகாஷ் மரம் அறுக்கும் ரம்பத்தால் குழந்தைகளின் கழுத்தை கொடூரமாக அறுத்து கொலை செய்தார். அதற்கு பின் மனைவியையும் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.4 பேரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டும் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web