மனைவி, குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலை! ஆன்லைனின் ரம்பம் ஆர்டர் செய்த ஐடி ஊழியர்!

 
கமிஷ்னர்

கடன் தொல்லையால் மனைவி, மகன், மகளை கொலை செய்த நபர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஐடி நிறுவன ஊழியர் பிரகாஷ். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், ஹரிகிருஷ்ணன் என்ற மகனும், நித்யஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். நேற்று திருமண நாளை முன்னிட்டு, குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு இரவு 9 மணி அளவில் அனைவரும் வீடு திரும்பி உள்ளனர்.

பிரகாஷ்

இந்நிலையில் காயத்ரியின் தந்தை திருப்பதி பிரசாதத்தை மகளுக்கு கொடுப்பதற்காக பிரகாஷ் வீட்டிற்கு வந்து போது அனைவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடல்களை மீட்டு பிரேத பிரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மரம் அறுக்கும் ரம்பத்தின் மூலமாக மனைவி, மகள் மற்றும் மகனை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. 

பிரகாஷ் வீட்டில், ரூபாய் 3.50 லட்சத்திற்கான கடன் பத்திரங்கள் இருந்துள்ளன. இதனால், கடன் தொல்லை காரணமாக இந்த விபரீத முடிவை பிரகாஷ் எடுத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், வேறு ஏதேனும் காரணமா? கடன் கேட்டு யாரும் தொல்லை கொடுத்துள்ளனரா என்று பிரகாஷ் செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர். 

காவல் போலீசார் காவல்நிலையம்

இதுகுறித்து தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறுகையில், கொலைக்கு பயன்படுத்திய ரம்பத்தை கடந்த 19-ம் தேதி பிரகாஷ் ஆன்லைனில் வாங்கியதாக ஆணையர் தெரிவித்தார். கடன் தொல்லையா? கடன் கொடுத்தவர்கள் தொல்லை தந்தார்களா? என்பது விசாரணைக்கு பின்பே தெரியும் என கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web