உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி! இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை!

 
ருத்ராங்கஷ் பாட்டீல்

அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு இரண்டாவது இந்தியராக, உலக துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று சாம்பியன்ஷிப்பை தட்டிப் பறிந்திருக்கிறார் ருத்ராங்கஷ் பாட்டீல். எகிப்த் நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் கலந்து கொண்ட 18 வயதான இந்திய வீரர் ருத்ராங்கஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 

ருத்ராங்கஷ் பாட்டீல்

இந்த போட்டியில் இத்தாலி வீரர் டானிலோ டென்னிஸ் சொலாஸ்ஸோவை 1எதிர்த்து போட்டியிட்ட இந்திய வீரரான ருத்ராங்கஷ் படேல் 17-13 என்ற கணக்கில் அவரை தோற்கடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார். 

ருத்ராங்கஷ் பாட்டீல்

இதன் மூலம் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி துப்பாக்கிச் சூடும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் உறுதி செய்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web