ஜூலை 15 முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்!! மாணவர்களே தயாரா இருங்க!!!

 
விடைத்தாள்கள் திருத்தும் பணி

தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் பிளஸ்2 பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான முடிவுகளும் வெளியாகிவிட்டது. எப்போதும் போல் தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர்.பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறும்போது, ‘‘பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

பள்ளிக்கல்வித்துறை தேர்வு

எனவே விண்ணப்தாரர்கள் நாளை (14-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in  என்ற இணையதளத்திற்கு சென்று Notification பக்கத்தில் தேர்வர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் தங்களின் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்கள் திருத்தும் பணி

பதிவிறக்கம் செய்யப்பட்ட விடைத்தாள் நகலை மறுகூட்டலுக்கு ஜூலை 15ம் தேதி முதல் 19ம் தேதி வரைக்குள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மறுகூட்டலுக்கு பிறகு பிளஸ்2 பொதுத்தேர்வில் மாணவர்களின் மதிப்பெண்கள் உயரும் பட்சத்தில் அவர்களின் விருப்ப படிப்பை படிக்க முடியும். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web