16 வயதில் திருமணம் செய்து கொள்லாம் !! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

 
நிக்காஹ்

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை நாடிய முஸ்லிம் இளம் தம்பதியரின் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணமகனுக்கு வயது 21 என்ற போதிலும், மணமகளுக்கு வயது 16 என்பதுதான் ஆச்சரியம். நீதிமன்றத்தை நாடிய இந்த இளம் தம்பதியர்கள், தங்கள் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த விசித்திரமான மனு நீதிபதி ஜஸ்ஜித் சிங் பேடி முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனுதாக்கல் செய்த முஸ்லிம் இளம் தம்பதியர் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகிய இருவரது வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் விருப்பமில்லை. மேலும்  மணப்பெண் 18 வயதை எட்டாத மைனர் என்றும் பெற்றோர்கள் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

நிக்காஹ்

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜஸ்ஜித் சிங், இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் முக்கியம் வாய்ந்த இவ்வழக்கின் தீர்ப்பை வாசித்தார். அதில்,  முஸ்லிம் தம்பதியரின் மைனர் திருமணம் செல்லும். மேலும் மனுதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதால், இந்திய அரசியலமைப்பில் எதிர்பார்க்கப்பட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது.

இஸ்லாமிய ஷரியா விதியை மேற்கோள் காட்டிய நீதிபதி ஜஸ்ஜித் சிங், முஸ்லிம் பெண்ணின் திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. “சர் டின்ஷா பர்துன்ஜி முல்லாவின் 'முஹம்மதின் சட்டத்தின் கோட்பாடுகள்' என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டிய நீதிபதி, அதன் பிரிவு 195 இன் படி, மணப்பெண்) 16 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதால், அவர் விரும்பும் நபருடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட தகுதியுடையவர். மேலும் மணமகன் 21 வயதுக்கு மேற்பட்டவர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. இவ்வாறு மனுதாரர்கள் இருவருமே முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி திருமண வயதுடையவர்களே’’ என்று நீதிபதி ஜஸ்ஜித் சிங் தீர்ப்பு அளித்தார்.

ஹரியானா நீதிமன்றம்

மேலும் பதன்கோட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ‘‘மனுதாரர்களின் அச்சத்திற்கு தீர்வு கண்டு, தம்பதியருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.  சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு தனது தீர்ப்பை கூறி முடித்தார். நீதிமன்றத்தை நாடிய இளம் தம்பதியர் திருமணத்தை அங்கீகரித்து நீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web