இளைஞர்களே உஷார்!! 15 ஆண்களை திருமணம் செய்து ரூ 35 லட்சம் மோசடி செய்த இளம் பெண்!!

 
வில்லி

இளைஞரை திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர்  ஒரே வாரத்தில் நகை மற்றும் பணத்துடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய பிரதேசத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. போபால் பகுதியைச் சேர்ந்தவர் காந்தா பிரசாத் நாத். இவருக்கு நீண்ட காலமாகவே திருமணம் ஆகவில்லை. அதனால், ஒரு நல்ல பெண் வேண்டும் என எதிர்பார்த்து இருந்தார். தனக்கு தெரிந்த நபர்களிடமும் உறவினர்களிடமும், திருமணத்துக்கு பெண் இருந்தால் சொல்லும்படி கூறியிருந்தார்.

marriage

அப்போது தினேஷ் என்பவர், தனக்கு தெரிந்த ஒரு உறவுக்கார பெண் இருப்பதாகவும், அவர் பெயர் பூஜா என்றும் சொன்னார். அதன்படியே ஒருநாள் பூஜாவை சந்தித்த பிரசாத்துக்கு பிடித்துவிட்டது. இதனால், தினேஷ் ஏற்பாட்டின்படி திருமணம் கோலாகலமாக நடந்தது.இந்நிலையில், திருமணம் முடிந்து 8 நாட்கள் ஆன நிலையில் திடீரென தினேஷின் மனைவிக்கு பூஜா போன் செய்து, தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி உள்ளார். இதைக் கேட்டதும், தன்னுடைய வீட்டுக்கு வருமாறு அழைத்தார். உடல்நிலை சரியில்லை என்பதால், பிரசாத்தும் மனைவியை தினேஷ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

வீட்டை விட்டு வெளியேறிய பூஜா அதன் பிறகு கணவர் காந்தா பிரசாத் நாத்தை தொடர்பு கொள்ளவில்லை, அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது இருந்தது. இதனையடுத்து தினேசை தொடர்பு கொண்டார் ஆனால் தினேஷின் போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பிரசாத், வீட்டில் இருந்த தங்கம் மற்றும் பணத்தை அந்த பெண் எடுத்துச் சென்றது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பூஜா குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் போபாலில் அந்தப்  பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கைது

விசாரணையில் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சீமா கான். அந்த பெண் இதுவரை 15 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்த நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து மோசடி செய்தது தெரியவந்தது. ஒவ்வொரு திருமண மோசடி க்கும் தினேஷ் தனக்கு 35 லட்சம் ரூபாய் தருவதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்தார்.இதை கேட்டு அதிர்ரந்து போன போலீசார், இந்த கும்பலில் எத்தனை பேர் உள்ளனர் என்று விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web