இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை! தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள்!

 
தற்கொலை

தமிழகத்தில் தற்கொலைகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன. பாலியல் கொடுமைகள், நடுரோட்டில் அரசியல் கொலைகள் அரங்கேறுவது என அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்த கொரோனா ஊரடங்கு காலங்கள் மக்களிடையே மன அழுத்தத்தை அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. திருமணமாகி 9 மாதங்களே ஆன நிலையில் இளம் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை திருமுல்லைவாயல் செந்தில் நகர், பிருந்தாவன் அவென்யு பகுதியில் வசித்து வருபவர் அய்யப்பன். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த திருவாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள ஒரு பாத்திரைக்கடையில் அய்யப்பன் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் அய்யப்பனுக்கும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகளான தரண்யா என்ற 25 வயது பி.காம். பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் சென்னை திருமுல்லைவாயலில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

தற்கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் தரண்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருமுல்லைவாயல் போலீசார் தரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகளின் மரணம் குறித்து தரண்யாவின் தந்தை மகாலிங்கம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், தரண்யாவின் திருமணத்தின் போது 35 பவுன் நகை தருவதாக பேசி 30 பவுன் மட்டும் உடனடியாக கொடுத்துள்ளார். மீதியுள்ள 5 பவுன் நகையை 2  வருடங்களில் கொடுத்துவிடுவதாக கூறி உள்ளார். இதற்கிடையில் அய்யப்பன் , அவரது சகோதரிகளான விஜயலட்சுமி மற்றும் சக்திமீரா ஆகியோர் எனது மகள் தரண்யாவிடம் 5 பவுன் நகை பாக்கியை கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த எனது மகள் தரண்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே எனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க போலீசிடம் மனு அளித்துள்ளார்.

திருமணம்

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 9 மாதங்களே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

வரதட்சணை கொடுமை காரணமாக கொலைகளும், தற்கொலைகளும் நாட்டில் நடந்த வண்ணமே உள்ளன. கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி வரும் தற்போதைய கால கட்டத்தில் இதுபோன்ற சில செய்திகளும் நம் காதுகளுக்கு எட்டுவது துரதிருஷ்டவசமானதாக உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web